Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM

நில அதிர்வை துல்லியமாக அறிய உதவும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

நில அதிர்வை துல்லியமாக அறிய உதவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சென்னை ஐஐடி வேதியியல் பொறியியல் துறையின் தலைவர்அருண் கே.தங்கிராலா வழிகாட்டுதலின் பேரில் ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகர்வால், நில அதிர்வு அலைகளின் வருகை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் அடிப்படையில் நில அதிர்வுகளை துல்லியமாக கண்டறிவதற்கான புதிய அணுகுமுறையை அவர்கள் இருவரும் உருவாக்கியுள்ளனர்.

நில அதிர்வு அலைகளில் வெளிப்படும் முதல் அலையை துல்லியமாகக் கண்டறிந்து மிகக்குறைந்த நேரத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த புதிய அணுகுமுறை பெரிதும் உதவும். நில அதிர்வுக்கான அலை வருகையின் துல்லியமான நேரத்தை மதிப்பிடவும் முடியும்.

பூமியின் மேற்பரப்பு வரை நில அதிர்வு அலைகள் தாக்குவதற்கு முன் கிடைக்கும் இந்த நேரம் மிகவும் பயன்தரக் கூடியதாகும். இந்தநேரம் மிகக்குறைவாக தோன்றினாலும் அணு உலைகள், மெட்ரோரயில் போக்குவரத்து, உயரமானகட்டிடங்களில் உள்ள லிப்ட்களைநிறுத்தவும், எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் போதுமானது.

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை, புகழ்பெற்ற ஆய்வு இதழான ‘பிளாஸ் ஒன்’ இதழில் வெளியாகி இருப்பதாக ஐஐடி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x