Last Updated : 10 Nov, 2021 03:03 PM

 

Published : 10 Nov 2021 03:03 PM
Last Updated : 10 Nov 2021 03:03 PM

பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிய நவ.12ல் தேசியக் கணக்கெடுப்பு

புதுச்சேரி

பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிய வரும் 12-ம் தேதி புதுச்சேரி முழுக்க தேசியக் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக மத்தியக் கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தேசியத் திறன் கணக்கெடுப்பை (நாஸ்) நடத்தி வருகிறது.

இந்த தேசியத் திறனடைவுக் கணக்கெடுப்பு 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. இவ்வருடம், இந்த கணக்கெடுப்பு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம், இந்த கணக்கெடுப்பை நடத்தும் வழிமுறைகளையும், கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது.

புதுச்சேரியில், இந்த தேசியத் திறன் கணக்கெடுப்பு 313 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 14,749 மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடக்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் கன மழை காரணமாக அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தேசியக் கணக்கெடுப்புக்குத் தேர்வான பள்ளிகள் மட்டும் இயங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x