Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் குளறுபடி: தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றச்சாட்டு

நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் மாணவர்கள் புகார் கூறிவருகின்றனர்.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வுகடந்த செப்.12-ம் தேதி நடந்தது.நாடு முழுவதும் 15.44 லட்சம் பேர்தேர்வு எழுதினர். தமிழகத்தில்மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகடந்த நவ.1-ல் வெளியானது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே வெளியிடப்பட்ட தங்கள் விடைத் தாள்நகல் மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது, தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் அதிகமுரண்பாடுகள் இருப்பதாக மாணவர்கள் பலர் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீட் பயிற்சி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘நீட் தகுதித்தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தேசியதேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட விடைக்குறிப்பு, விடைத்தாள் நகல் அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் பெறப்போகும் மதிப்பெண்ணை கணிக்க முடியும்.அந்த வகையில், 600 மதிப்பெண் வரை கிடைக்கும் என எதிர்பார்த்த மாணவர்களுக்கு ஒற்றைஇலக்கத்தில்தான் மதிப்பெண் கிடைத்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியீட்டில் குறிப்பிட்ட அளவுதான் வித்தியாசம் இருக்கும். ஆனால், நீட் தேர்வில் அதிக அளவு வித்தியாசம் இருப்பது கவலை அளிக்கிறது.

என்டிஏ நடத்தும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x