Published : 10 Oct 2021 03:16 AM
Last Updated : 10 Oct 2021 03:16 AM
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பாண்டு 712காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மார்ச் 4 முதல் 24-ம்தேதி வரை நடைபெற்றது. சுமார்10 லட்சம் பட்டதாரிகள் பதிவுசெய்தனர். அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுததகுதிபெற்றனர். இதைத்தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் கரோனா பரவல் காரணமாக தேர்வானது தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் முதல்நிலைத் தேர்வு இன்று (அக்.10) நடைபெறவுள்ளது. காலையில் முதல் தாள் தேர்வும், மதியம் 2-ம்தாள் தேர்வும் நடத்தப்படும்.
இதற்காக நாடு முழுவதும்73 நகரங்களில் 2,800 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 மையங்களில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுஎழுதவுள்ளனர்.
இந்நிலையில் கரோனா பரவலால் பட்டதாரிகள் தேர்வுக்கு முகக்கவசம் அணிவதுடன் சானிடைசர்எடுத்துவர வேண்டும். தேர்வுமையத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை யுபிஎஸ்சி விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT