Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

சட்டப் படிப்புக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்புக்கு அக்டோபர் 6-ம் தேதி வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ரஞ்சித் ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு எல்எல்பி (ஆனர்ஸ்) படிப்புக்கும், அதேபோல, அரசுசட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டுஎல்எல்பி படிப்புக்கும் ஆன்லைன்விண்ணப்ப பதிவு செப்டம்பர் 8-ம்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

மாணவர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tndalu.ac.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியின் எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30-ம்தேதி ஆகும்.

அதேபோல, அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் எல்எல்பிபடிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 6-ம் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x