Published : 12 Sep 2021 11:54 AM
Last Updated : 12 Sep 2021 11:54 AM

10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்: முதல்வர் உத்தரவு

சென்னை

கரோனா பரவல் காரணமாக 10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதிவரையும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இத்தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் எழுதுவதாக இருந்த நிலையில், அவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை, தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x