Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM
தற்காலிக ஆசிரியர்கள் 1,400பேரின் பணிக்காலம் நீட்டிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2009-10-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ், தரம்உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு 1,200 பட்டதாரி ஆசிரியர்மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர்என மொத்தம் 1400 பணியிடங்கள்தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மே மாதத் துடன் முடிந்துவிட்டன.
இந்த 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-24)தொடர் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார். அதை பரிசீலனை செய்து 1,400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024 மே 31-ம் தேதி வரை 3 ஆண்டுகள் அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர்நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT