Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM

1,400 ஆசிரியர்களின் பணி காலம் நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை

தற்காலிக ஆசிரியர்கள் 1,400பேரின் பணிக்காலம் நீட்டிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2009-10-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ், தரம்உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு 1,200 பட்டதாரி ஆசிரியர்மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர்என மொத்தம் 1400 பணியிடங்கள்தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மே மாதத் துடன் முடிந்துவிட்டன.

இந்த 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-24)தொடர் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார். அதை பரிசீலனை செய்து 1,400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024 மே 31-ம் தேதி வரை 3 ஆண்டுகள் அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர்நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x