Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

‘அடுத்த கலாம்’ - இணைய நூல் அரங்கம்: செப்.11 மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ என்றநூலின் இணைய அரங்கம் வரும் 11-ம் தேதி (சனி) மாலை 6 மணிக்குநடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை திசையெட்டு பதிப்பகம், ‘ஆளுமைசிற்பி’ மாத இதழ், விஜயா பதிப்பகம் இணைந்து வழங்குகின்றன.

மேலாண்மை வல்லுநரும் எழுத்தாளருமான சோம வள்ளியப்பன், டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாமின் குடும்ப உறுப்பினர் வழக்கறிஞர் நாகூர் ரோஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று நூலைப் பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

‘ஆளுமை சிற்பி’ மாத இதழின் ஆசிரியர் டாக்டர் ஞானசேகர், எழுத்தாளர் பிரியசகி, விஜயா பதிப்பகத்தின் புனிதா சிதம்பரம் உள்ளிட்டோர் இந்த இணைய நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை https://youtube.com/channel/UCYL-qYLqWjK72z4T25bSp7Q என்ற லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x