Published : 14 Aug 2021 03:17 AM
Last Updated : 14 Aug 2021 03:17 AM
பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில் 1 முதல் 12-ம் வகுப்புவரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
1 முதல் 8-ம் வகுப்பு வரை 40முதல் 50 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 9-ம் வகுப்புக்கு 38 சதவீதம், 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், 11 மற்றும் 12-ம்வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம்என்ற விகிதத்தில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும்.
அதேநேரம் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கேற்ப முழு பாடத்தையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது மாணவர்களுக்கு 50 நாட்கள், ஏற்கெனவே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்திய பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT