Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை

ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘கரோனா ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில், அரசு ஐடிஐ,அரசு தொழில்நுட்ப கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் மாணவர்களுக்கு இந்தகல்வியாண்டுக்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பழைய பயண அட்டை

அதன்படி, அந்தந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படும்போது மாணவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லதுபழைய இலவச பயண அட்டையை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் மூலம் நடத்துநர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x