Published : 05 Aug 2021 03:08 PM
Last Updated : 05 Aug 2021 03:08 PM

பாலிடெக்னிக் நேரடி 2-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்றே கடைசி 

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும்.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 18,120 இடங்கள் உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தொடங்கப்பட்டு நடைபெற்றது. முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

இதற்கிடையே நேரடி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 20-ம் தேதி இணைய வழியில் தொடங்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு இன்று (ஆக.5) கடைசித் தேதி ஆகும்.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இன்றுக்குள் தொழில்நுட்ப க்கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதள வசதி இல்லாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் www.tngptc.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x