Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM
பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது,எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம்? என பல கேள்விகள்மாணவர்களுக்கு எழும். அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆலோசனை நிகழ்வை ஜூலை 10 முதல் ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இன்று (சனிக்கிழமை) மாலை4.30 முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்பு பற்றி புகழ்பெற்ற கல்வியாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.
அதன்படி, ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியிலுள்ள அல்ஸ்டம் சைட் குவாலிட்டி இயக்குநர் எஸ்.சண்முகசுந்தரம், சென்னை கோகுல் ஆட்டோடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம், சென்னை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் எம்.ஜெய்குமார் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள் ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT