Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

சட்டக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக தேர்வெழுத வாய்ப்பு: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு

இணைய வழியில் தேர்வு எழுதஇயலாத சட்டக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக தேர்வெழுதவும் வாய்ப்பு அளிக்கப்படும் என சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போதைய கரோனா சூழலைகருத்தில்கொண்டு சட்டப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் இணையவழி வாயிலாகஜூலை 19 முதல் நடத்தப்படஉள்ளன. தேர்வுக்கு பதிவுசெய்துள்ள மாணவர்கள் இணையவழியில் தேர்வெழுதலாம்.

பல்வேறு காரணங்களால் இணையவழியில் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் இயல்புநிலை திரும்பியதும் கல்லூரியில் நேரடியாக தேர்வெழுதும் வாய்ப்பையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது. அத்தகைய மாணவர்கள் இணையவழி தேர்வுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்திவிட்ட காரணத்தினால் நேரடி தேர்வெழுத எவ்விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வுமுறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x