Published : 13 Jul 2021 03:12 AM
Last Updated : 13 Jul 2021 03:12 AM

கரோனா காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது: ‘மாநில நல்லாசிரியர் விருது’ விதிமுறையில் மாற்றம்

சென்னை

2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஏற்கெனவேவிண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விரைவில் விண்ணப்பம் பெறப்படவுள்ளது. இந்நிலையில், மாநில நல்லாசிரியர் விருது தேர்வு விதிமுறையில் ஒருசில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

கரோனா கால கல்விப்பணி கட்டாயம்

அதன்படி, விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களின் தகுதியில், கரோனா கால கல்விப்பணி கட்டாயமாக்கப்பட உள்ளது. எனவே, கடந்தஆண்டு கரோனா பெருந்தொற்று பரவிய முதல் அலையின்போதும், அதன் பிறகும், தமிழக அரசு உத்தரவின்படி, தவறாமல் பணிக்கு வந்தவர்கள், கரோனா தன்னார்வ பணிகளில் ஈடுபட்டவர்கள். கரோனா காலத்தில் கல்வித்தொலைக்காட்சி மற்றும் இணைய வழிகளில், பாடம்நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விருதைப் பெற முடியும்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x