Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி முறையாக நடக்கிறதா என திடீர் ஆய்வு செய்யுமாறு மண்டல இயக்குநர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ், அனைத்து மண்டலஇயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. சிபிஎஸ்இ வரையறை செய்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்வு முடிவு தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
எனவே, அப்பணிகளை கண்காணிக்க மண்டல இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள் தங்கள் அதிகாரஎல்லைக்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
முன்கூட்டியே பள்ளிகளுக்கு தகவல் அனுப்பக் கூடாது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா என அனைத்து பிரிவு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 12-க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT