Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

ஆவடி போர் ஊர்தி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

சென்னை

ஆவடியில் அமைந்துள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி சேர பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆட்டோமொபைல் பாடங்கள் படித்தவர்களும் மற்றும் நூலக அறிவியல் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.boat-srp.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரான விஞ்ஞானி வி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x