Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சி, இன்று காலை11 மணிக்கு நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன? எத்தனை ஆண்டுகள்படிக்க வேண்டும்? என்பது போன்றகேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அந்தத் தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்றஇணையவழி வழிகாட்டு நிகழ்ச்சிநடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும்,யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராவோரும் இதில்கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சியில், மாநில திட்டமிடல் மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினரும், பிரபல மண் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கோ.முனிராஜ் ஐபிஎஸ்., சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனர்.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த நிகழ்ச்சிநடைபெறும். பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3pVDpGj என்றலிங்க்கில் பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x