Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்' இணையவழி நிகழ்ச்சி: ஞாயிறு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்துவழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும்வழிகாட்டு நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.20) காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், எவ்வளவு செலவாகும்? என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

இத்தகைய தயக்கத்தைப் போக்கி, இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.கரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் மாநில திட்டமிடல் மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினரும், பிரபல மண்உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.முனிராஜ், ஐபிஎஸ்., சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

இணையவழியில் இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20)காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3pVDpGj என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x