Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

கோப்புப் படம்

சென்னை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்துவித பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையின்போது அரசு அறிவுறுத்தியுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாடவாரியாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதன்படி மாணவர் சேர்க்கை பணிகளின்போது பொதுப்பிரிவுக்கான 31 சதவீத பட்டியலை முதலில் தயாரிக்க வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமைதரவேண்டும். எக்காரணம் கொண்டும் சாதிவாரியாக பாகுபாடு காட்டுதல்கூடாது.

அதன்பின்னரே அந்தந்த பிரிவுக்கான பட்டியலை தயாரித்து சேர்க்கை நடத்த வேண்டும். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை அனைத்துவித பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x