Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?- மாணவிக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக சந்தேகம் கேட்ட மாணவிக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நிலவிவருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவர் பொதுத்தேர்வு தொடர்பான சந்தேகங்களை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் தெரிவிக்கும் குரல் பதிவு (ஆடியோ) சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

அதில், ``பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா? எனில் எப்போது நடைபெறும்? நீட், ஜேஇஇ உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், தேர்வு பற்றிய முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும்'' என்று மாணவி கேள்விகளை முன்வைக்கிறார்.

அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துப் பேசும்போது, ``மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதைப் பார்த்த பின்னர், முதல்வருடன் கலந்து ஆலோசித்துதான் இதில் முடிவு எடுக்க முடியும். உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் முக்கியம் என்பதால் தேர்வு ரத்து செய்யப்படாது. கரோனா பரவல் குறைந்தபின் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்'' என்றார்.

மாணவியின் அழைப்பை ஏற்று, அவருக்கு அமைச்சர் பதில் வழங்கியதற்கு, சமூக வலைதளங்களில் வரவேற்புக் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x