Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம் கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது

திருச்சி

கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பு மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல்- கற்பித்தல் இடைவெளியை சரி செய்யும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாட கையேடும் (Bridge Course Material), 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் (Work Book) கல்வித் துறையால் வழங்கப் பட்டுள்ளது.

தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக ஏப்.22-ம் தேதி(நேற்று) முதல் மே 10-ம் தேதி வரைஇணைப்புப் பாடம் கற்பித்தல்வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள் ளது. வகுப்பு, நேரம் என்ற அடிப்படையில் விவரம்:

9-ம் வகுப்பு- காலை 8- 8,30, பிற்பகல் 12- 12.30

8-ம் வகுப்பு- காலை 8.30- 9, பிற்பகல் 12.30- 1

7-ம் வகுப்பு- காலை 9- 9.30, பிற்பகல் 1.30- 2

6-ம் வகுப்பு- காலை 9.30- 10, பிற்பகல் 2- 2.30

5-ம் வகுப்பு- காலை 10- 10.30, பிற்பகல் 2.30- 3

4-ம் வகுப்பு- காலை 10.30- 11, பிற்பகல் 3- 3.30

3-ம் வகுப்பு- காலை 11- 11.30, பிற்பகல் 3.30- மாலை 4

2-ம் வகுப்பு- காலை 11.30- 12, மாலை 4- 4.30

இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு ஒளிபரப்பு மே 10-ம் தேதி முடிவடைந்தவுடன், பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

மே 10-ம் தேதி வரை இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x