Published : 15 Apr 2021 04:08 PM
Last Updated : 15 Apr 2021 04:08 PM

கரோனா பரவல்; தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் இன்று (ஏப். 15) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளை ஏற்கெனவே ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மே 5ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x