Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு ஜூனில் பொது நுழைவுத் தேர்வு

சென்னை

நாடு முழுவதும் உள்ள 41 மத்தியபல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (சியூசிஇடி) வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வுநடத்தவேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை - 2020 வலியுறுத்துகிறது.

41 மத்திய பல்கலைக்கழகங்கள்

அதன்படி, முதற்கட்டமாக நாடுமுழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு 2021-2022-ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு (சியூசிஇடி) நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. இந்நிலையில், 2021-2022-ம் கல்விஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு மட்டுமே நடப்பு ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது உயர் தொழில்நுட்ப திறனறித் தேர்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி வழி தேர்வு

இதையடுத்து, அடுத்த கல்விஆண்டு முதல் முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த பொது நுழைவுத் தேர்வானது 3 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இளநிலை படிப்புக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x