Last Updated : 30 Mar, 2021 02:46 PM

 

Published : 30 Mar 2021 02:46 PM
Last Updated : 30 Mar 2021 02:46 PM

புதுச்சேரியில் கரோனா அதிகரிப்பதால் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும்: கமலக்கண்ணன் வலியுறுத்தல்

திருநள்ளாறு பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன்

 காரைக்கால்

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கத் துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.

திருநள்ளாறு பகுதியில் இன்று (மார்ச் 30) முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கடந்த 15 நாட்களாகப் புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று பயில அனுமதிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறில் பள்ளி மாணவிகள் 2 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.

எனவே மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் விடுமுறை அறிவிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களைக் கிருமிநாசினியால் தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநள்ளாறில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு அமைவது உறுதி'' என்று முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x