Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில் 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த 2019 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 2020 ஜனவரி 12, 13-ம் தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் 2020 டிசம்பர் 24 முதல்ஜனவரி 6 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேர்காணல் தேர்வு வரும் 23-ம் தேதிமுதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. நேர்காணல் தேதிகள் தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnusrbonline.org)வெளியிடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT