Published : 18 Feb 2021 03:20 AM
Last Updated : 18 Feb 2021 03:20 AM
பள்ளிகொண்டா புனித தெரேசாள் உயர் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் டி.ராஜா திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா சுங்கச்சாவடி அருகேஇயங்கி வரும் அரசு நிதியுதவிபெறும் பள்ளியான புனித தெரேசாள் உயர் நிலைப்பள்ளி யில் 327 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது.
இதையறிந்த மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் டி.ராஜா கடந்த 2018-19-ம் நிதியாண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சத்தை ஒதுக்கீடுசெய்தார். அதன்படி. புனித தெரேசாள் உயர்நிலைப்பள்ளி யில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.
இதற்கான திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேலூர் மறை மாவட்டத்தின் பரிபாலகர் ஜான் ராபர்ட் தலைமை வகித்தார். பள்ளியின் மேலாளர் தந்தை கிளமென்ட் ரொசாரியோ முன் னிலை வகித்தார். முன்னதாக, பள்ளியின் தாளாளர் அற்புதராஜ் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி.ராஜா சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு, கூடுதல் வகுப் பறைகளை திறந்து வைத்தார்.
முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் மேத்யூ நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT