Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

இளநிலை பொறியியல் படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. தங்கப் பதக்கம்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் 4 வளாக கல்லூரிகள், 16 உறுப்பு கல்லூரிகள், 10 அரசு கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இதில் முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெறுவார்கள். அதில், பிரிவு வாரியாக முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் முதலாமாண்டு சேர்ந்து 2020-ல் பட்டதாரிகளாக வெளியேறும் சிறந்த 460 மாணவர்களின் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் பெறவுள்ள மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியிடபட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக வளாககல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற 13 மாணவர்களுக்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 9 மாணவர்களுக்கும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் 9 பேருக்கும் கட்டடவியல் மற்றும் திட்டமிடல் நிறுவனத்தில் பயின்ற ஒரு மாணவி என மொத்தம் 32 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள கல்லூரிகளில் பிரிவு வாரியாக முதலிடம் பிடித்த 37 மாணவர்களுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத் தின் 41-வது பட்டமளிப்பு விழாநடைபெறும்போது, பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு சான்றிதழுடன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதக்கப் பட்டியலில் அரசு பொறியியல் கல்லூரிகளில் பயின்ற ஒரு மாணவரின் பெயர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x