Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

‘இந்து தமிழ் திசை’, ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ 3-வது ஆன்லைன் நிகழ்ச்சி: பிப்.17-ம் தேதி தேதி தொடங்குகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’யின் 3-வது ஆன்லைன் நிகழ்ச்சிபிப்.17-ம் தேதி தொடங்குகிறது.

குழந்தைகளின் கையெழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கிலான ‘இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில், 2-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 5-ம் வகுப்புக்கு மேல் பயிலும் அனைத்து மாணவர்களும் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாகப் பயிற்சிகள் நடைபெறும்.

ஜூனியர் பிரிவுக்கான பயிற்சி பிப்.17 முதல் பிப்.26 வரை 10 நாட்கள் தினமும் மாலை 4 மணி முதல்5 மணி வரையும், சீனியர் பிரிவுக்கான பயிற்சி பிப்.17 முதல் பிப்.23வரை தினமும் மாலை 5 முதல் 6மணி வரையும் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் 100 பக்க அளவிலான பயிற்சித்தாள் தரப்பட்டு, அதன் வழியே பயிற்சிகள் நாள்தோறும் வழங்கப்படும். இந்தப்பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அழகான கையெழுத்து அமையும்.

இந்தக் கையெழுத்துப் பயிற்சியை நீண்டகால அனுபவமிக்க புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளர் சிந்துஜா புவனேஸ்வரன் வழங்க உள்ளார். இதில், பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/special/handwriting-3 என்ற இணையதளத்தில் ஜூனியர் பிரிவு எனில் ரூ.885/-ம், சீனியர் பிரிவு எனில் ரூ.767/-ம் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண் ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x