Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளைதொடர்ந்து 9-ம் வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல்மூடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், 2020-21-ம் கல்வி ஆண்டில் 60 சதவீத அளவுக்கு வேலை நாட்கள் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள குறைந்த நாட்களில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல.
இதைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டும் கடந்த 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. அனைத்துசனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 12-ம் வகுப்புகள் நீங்கலாக மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9, 11-ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முடிவடைய இன்னும் குறுகிய காலமே இருப்பதால் 9-ம்வகுப்புக்கும் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT