Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

முக்கியமானபாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்சிஇஆர்டி இயக்குநர் என்.லதா, அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று மற்றும் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில்கொண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் பாடவாரியாக அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுவழங்கப்பட்டுள்ள முக்கியமானபாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் முன்னுரிமை அளித்து முதலில்நடத்த வேண்டும். அதன்பின் நேரம் இருந்தால் எஞ்சிய பாடங்களை நடத்திக் கொள்ளலாம்.

மேலும், நுழைவு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்றபடி முழு பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலை பள்ளி தலைமையாசிரியர் களுக்கும் தெரிவித்து உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x