Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி முதல் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும்

புதுச்சேரி

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு அறிவிக்கப்பட்ட பல கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

முதற்கட்டமாக, பெற்றோர் அனுமதியுடன் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஐயங்களைத் தீர்க்கும் வகுப்பு தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இவ்வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் வரும் 18-ம் தேதி முதல் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரதேசங்களில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை, 18-ம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x