Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM
கடந்த 2017-ம் ஆண்டு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் எமினென்ஸ்) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பிரபல கல்வி நிறுவன மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, காரக்பூர் ஐஐடிஉள்ளிட்ட 20 கல்வி நிறுவனங் களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ், உயர் சிறப்பு கல்வி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது நிறுவனங்களை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிகளை யுஜிசி வெளியிட்டிருக்கிறது.
இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை தொடங்கலாம். அதே போல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வில் கிளைகளை அமைத்து கொள்ளலாம். இந்திய கல்வி நிறுவனங்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகளில் 3 இடங்களில் மட்டுமே கிளைகளை தொடங் கலாம். எனினும் ஒரு கல்வி யாண்டில் ஒரு கிளையை மட்டுமே அமைக்க வேண்டும்.
கல்வி, ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி, நிர்வாகம் குறித்த 10 ஆண்டு கால திட்டமிடல், 5 ஆண்டு கால செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்களை தொடங்கும் முன்பாக உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தடை யில்லா சான்றிதழை பெற வேண்டும். மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை யுஜிசி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT