Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘பிரைன் பூஸ்டர்’ 2-வது பயிற்சி பட்டறை: ஆன்லைனில் ஜன.18-ல் தொடக்கம்; பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ‘பிரைன் பூஸ்டர்’ எனும் வேகமான நினைவாற்றல் மற்றும் கணிதத் திறன் தொடர்பான 2-வதுஆன்லைன் பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன. இந்த பயிற்சிப் பட்டறை வரும் 18-ம்தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேகமான நினைவாற்றல் மற்றும் கணிதத் திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், ‘நீட்’, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்காக தயாராகி வருவோருக்கு பயனளிக்கும் வகையிலும் ‘பிரைன் பூஸ்டர்’ எனும் 2-வது ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை திருச்சியில் உள்ள ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்துகின்றன.

இதில் 9 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம். இந்த பயிற்சிப் பட்டறை ஜனவரி 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது.

போட்டித் தேர்வுக்கு உதவும்

இதில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான நுட்பங்கள், கணிதத் திறனை அதிகரித்தல், விரைவான வாசிப்புக்கான நுட்பங்கள், ஆய்வு நுட்பங்கள், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் செறிவுநுட்பங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். இது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவுவதோடு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள பயன்படும்.

இந்த பயிற்சியை 15 ஆண்டுகால அனுபவமிக்க நினைவாற்றல் பயிற்சியாளரும், ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ இயக்குநருமான எஸ்.தமிழ்செல்வன் வழங்க உள்ளார்.

இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.885. பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/event/78-brain-booster-2.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x