Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி மாதம் நடக்கஉள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்ததேர்வுகள் வரை தேர்ச்சி பெற்று பட்டம், பட்டயத்துக்கு தகுதிபெற்ற மாணவர்கள் விண்ணப்பத்தை ஜன.18 வரை சமர்ப்பிக்கலாம்.
பல்கலை.யின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தமாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி வாயிலாக பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், சம்பந்தப்பட்ட துறைஇயக்குநர் மூலமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் செலானை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தத் தகவலை சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு)ஆர்.விஜயலட்சுமி தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT