Published : 17 Dec 2020 06:19 PM
Last Updated : 17 Dec 2020 06:19 PM

சைனிக் பள்ளிகளில் சேரலாம்: விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (டிச.18) கடைசித் தேதி ஆகும்.

நாடு முழுவதும் 23 மாநிலங்கள்‌ மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜன.10-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தேர்வு பிப்.7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் டிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

எனவே, இந்தத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள நாளை கடைசித் தேதி ஆகும்.

மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டோ விளக்கம் பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x