Last Updated : 16 Dec, 2020 01:59 PM

 

Published : 16 Dec 2020 01:59 PM
Last Updated : 16 Dec 2020 01:59 PM

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் நாளை திறப்பு; இளநிலை, முதுநிலை இறுதியாண்டு வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி

9 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் கல்லூரிகள் நாளை (டிசம்பர் 17-ம் தேதி) திறக்கப்படுகின்றன. அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பிற்கான இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் நடைபெற உள்ளன.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்துப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

ஊரடங்கில் தொடர்ச்சியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் அடுத்தகட்டமாக 17ஆம் தேதி (நாளை) முதல் அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பிற்கான இறுதியாண்டு வகுப்புகளைத் தொடங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளில், ''மத்திய சுகாதார அமைச்சகத்தின் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடக்க வேண்டும், 50 சதவீத மாணவர்கள் மட்டுமே ஒரு நேரத்தில் கல்லூரியில் இருக்கும்படி கல்லூரி நிர்வாகம் வருகையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்'' என்பன போன்ற வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு, நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து கல்லூரி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x