Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 313 எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பின. 92 பிடிஎஸ் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்பட்டன.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு 21-ம் தேதி நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 128 எம்பிபிஎஸ் இடங்கள், 4 பிடிஎஸ் இடங்களில் 41 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டும்நிரம்பின. 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவில் காலியாகவுள்ள இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுதொடங்குகிறது. டிச.4 வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தினமும் 500 பேர் வீதம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றவர்(நீட் மதிப்பெண் 710) முதல் பட்டியலில் 5,441 (நீட் மதிப்பெண் 495)வரையுள்ளவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT