Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம் முதல்வர் வருகையால் சிறப்பு பிரிவு கலந்தாய்வு திடீர் ரத்து: வெளியூர்களில் இருந்து வந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அவதி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேருவிளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்க முதல்வர் வருவதால், சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்துவந்து சென்னையில் தங்கியுள்ளமாற்றுத் திறனாளி மாணவர்கள்அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்கள், 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்கள் (என்ஆர்ஐ-க்கு 306 இடங்கள் உட்பட) மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

இதற்கிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தரவரிசைப்பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரும் இடம்பெற்றனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்உள்ஒதுக்கீடு (405 இடங்கள்) வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 951 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுகலந்தாய்வு முதலில் நடைபெறஉள்ளது. நண்பகலில் அரசு பள்ளிமாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். முதல்வரின் திடீர் வருகையால் இன்று நடைபெற இருந்தசிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து வந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x