Published : 19 Oct 2020 12:32 PM
Last Updated : 19 Oct 2020 12:32 PM

யுஜிசி நெட் தேர்வு நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைப்பு: என்டிஏ அறிவிப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு செப்.24-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நெட் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. பாடவாரியான அட்டவணை நேர அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x