Published : 05 Oct 2020 07:19 AM
Last Updated : 05 Oct 2020 07:19 AM

சிறப்பு பிரிவு பொறியியல் கலந்தாய்வு: இன்று ஒதுக்கீடு பட்டியல்

சென்னை

பொறியியல் சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று (அக்.5) வெளியாகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் கடந்த அக்.1-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 2,413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

அதில் 1,300 பேர் முன்பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து மாணவர் களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று (அக்.5) வெளியிடப்படும். அதன்பின் இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை (அக்.6) வழங்கப்படும்.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மொத்தம் உள்ள 7,435 இடங்களுக்கு 1,300 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளதால் 6 ஆயிரம் இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்.8-ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x