Published : 02 Oct 2020 06:55 AM
Last Updated : 02 Oct 2020 06:55 AM

‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: 3-வது அமர்வு இன்று தொடங்குகிறது

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

பொறியியல், மருத்துவத் துறை

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சியின் 3-வது அமர்வு இன்று (அக்.2) தொடங்கி, 3 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது.

இதில், பல்வேறு துறைகளில் பொறியியல், மருத்துவ ஆய்வுகளின் எதிர்கால நோக்கம் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்துக்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த பயனுள்ள தகவல்களை மூத்த வல்லுநர்கள் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இன்றைய நிகழ்வில், கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் பேராசிரியரும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநருமான டாக்டர் சுதா ராமலிங்கம், ‘பொது சுகாதாரத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், நாளை (சனி) காஞ்சிபுரம் ஐஐஐடிடிஎம் உதவிப் பேராசிரியர் டாக்டர் ரகுராமன் முனுசாமி, ‘ஐஐஐடிஸ்: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், நாளை மறுநாள் (ஞாயிறு) புதுடில்லி இயக்குநர் ஜெனரல் (ஆர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x