Published : 01 Oct 2020 03:39 PM
Last Updated : 01 Oct 2020 03:39 PM

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை

பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 17 வகையா துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

''மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அக்டோபர் 15-ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்த பின்னர், அதை நகல் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் அக். 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக் குழுச் செயலாளருக்குத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்குப் பின்னர் தொடங்கும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு முன்னரே தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x