Published : 30 Sep 2020 07:42 AM
Last Updated : 30 Sep 2020 07:42 AM

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: 86,326 மாணவர்கள் விண்ணப்பம்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

அதன்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. இதற்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பணிகள் இன்று (செப்.30) முடிக்கப்பட்டு, தேர்வான மாணவர்கள் பட்டியல் பள்ளிகளில் ஒட்டப்படவுள்ளன. ஒரு பள்ளியில் அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் அக்.1-ம் தேதி வருவாய்த் துறைஅதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்பு குலுக்கல் மூலம்மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த குலுக்கலில் பெற்றோரும் பங்கேற்கலாம். அதன்பின் தேர்வான குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x