Published : 30 Sep 2020 07:39 AM
Last Updated : 30 Sep 2020 07:39 AM

அரசு பள்ளிகளில் இதுவரை 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்தஆக.17-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே நடப்புஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரை (நேற்றைய நிலவரப்படி) 15.98 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1-ம் வகுப்பில் 3.08 லட்சம், 6-ம்வகுப்பில் 3.66 லட்சம், 9-ம் வகுப்பில் 1.04 லட்சம், 11-ம் வகுப்பில் 4.14 லட்சம் மாணவர்களும், இதர வகுப்புகளில் 4.06 லட்சம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் சேர்க்கை பணிகள் இன்றுடன் (செப்.30) நிறைவு பெறுகின்றன. ஆனால், மாணவர் சேர்க்கையை விஜயதசமி தினம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x