Published : 23 Sep 2020 07:51 AM
Last Updated : 23 Sep 2020 07:51 AM

தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம் மாணவர்கள்அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாகதேவன்பாளையம், புதுக்கரைபுதூர், கோட்டுப்புள்ளாம் பாளையம் உள்ளிட்ட 12 இடங்களில், 1,199 ரேஷன் கார்டுதாரர்கள் பயன் அடையும் வகையில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் தொடக்க விழா கோபியில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் தற்போது இல்லை. நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில், தமிழ அரசின் பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் நீதிமன்றஉத்தரவை மீறி கல்விக் கட்டணம் பெற்றது குறித்து அந்த பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் இதுவரை 15.30 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம்மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் காலியாக உள்ள தொழில் கல்வி பிரிவுக்கு விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு 15 தொடக்கப் பள்ளிகளும் 10 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும். ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதை மீறி வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x