Published : 21 Sep 2020 12:29 PM
Last Updated : 21 Sep 2020 12:29 PM

தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் தொடங்கின

கரோனா தொற்றால், கல்லூரிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் இன்று (செப். 21) தொடங்கி உள்ளன.

யுஜிசி வழிகாட்டுதலின்படி, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் முதல் முறையாக ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் இன்று முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை, மதியம் என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று இறுதிப் பருவத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்.30 வரை இணைய வழியில் தேர்வுகள் நடைபெற உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகளுக்கான தேர்வு இன்று தொடங்கி, செப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.21 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இறுதிப் பருவத் தேர்வுகள் இன்று தொடங்கி செப்.29 வரை நடைபெற உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுகள் நாளை (செப்.22) தொடங்க உள்ளன.

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவதை அடுத்து, கேள்வித்தாளை இணையத்திலேயே மாணவர்களுக்கு அனுப்பி வைத்தல், வினாத்தாள் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாத்தல், இணையவழித் தேர்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் ஆகிய ஏற்பாடுகளை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x