Published : 20 Sep 2020 07:15 AM
Last Updated : 20 Sep 2020 07:15 AM
‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ உடன்இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று வணிகவியல் படிப்புகள் பற்றி துறைசார்வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இணையவழியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், வேல்யூவேஷன் ஸ்டாண்டர்ட்ஸ் போர்டு தலைவரும், சென்னை கே.கோபால் ராவ் ஆடிட்டிங் நிறுவன பங்குதாரருமான டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜு, மதுரை சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் சிஏ.உமா கிருஷ்ணா, சென்னை கிருஷ்ணன் அண்ட் செட்டியப்பன் ஆடிட்டிங் நிறுவன உதவி மேலாளர் (தணிக்கை) சிஏ. சத்யநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு வணிகவியல் படிப்பு தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) இணைந்து நடத்துகின்றன.
இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://connect.hindutamil.in/event/35-uuk.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT