Published : 17 Sep 2020 06:49 AM
Last Updated : 17 Sep 2020 06:49 AM

கரோனா பரிசோதனைக்கு எளிய கருவி: சென்னை ஐஐடி-க்கு சிறப்பு விருது

அமெரிக்க சுகாதார நிறுவனத்துடன் இணைந்து எளிய கரோனா பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்த சென்னை ஐஐடி-க்கு அமெரிக்க - இந்திய சிறப்பு விருதுகிடைத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய - அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதி திட்டத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ‘இக்னைஷன் கிரான்ட்ஸ்’ என்ற சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னை ஐஐடியும், ரிகோவர் ஹெல்த்கேர் என்ற அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ள எளியகரோனா பரிசோதனை கருவிக்கு‘இக்னைஷன் கிரான்ட்ஸ்’ விருதுகிடைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடிபயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங்துறை இணைபேராசிரியர் வி.வி.ராகவேந்திரா சாய் கூறும்போது, ‘‘இந்தக் கருவி மூலம் கரோனாபாதிப்பை துல்லியமாக எளிதில் கண்டுபிடிக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x