Published : 16 Sep 2020 06:03 PM
Last Updated : 16 Sep 2020 06:03 PM

ஒரு பெண் குழந்தை, முதல் மதிப்பெண், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு

ஒரு பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு:

''முழு நேர மாணவர்களுக்கான 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/ISHAN_UDAY_GUIDELINE.pdf

பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும். இதற்கும் 30 வயதே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/GuidelinesUGCUniversityRankHolder1819.pdf

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மேற்படிப்புக்காக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழிக் கல்விக்கு உதவித்தொகை கிடையாது.

கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/guidelines_pgsprof_gl1819.pdf

மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2020''.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x