Published : 16 Sep 2020 06:03 PM
Last Updated : 16 Sep 2020 06:03 PM
ஒரு பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு:
''முழு நேர மாணவர்களுக்கான 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/ISHAN_UDAY_GUIDELINE.pdf
பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும். இதற்கும் 30 வயதே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/GuidelinesUGCUniversityRankHolder1819.pdf
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மேற்படிப்புக்காக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழிக் கல்விக்கு உதவித்தொகை கிடையாது.
கூடுதல் விவரங்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/guidelines_pgsprof_gl1819.pdf
மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2020''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT